புதிய பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்த காணொளியும் கடற்படையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மிகவும் அழகான பவளப்பாறை ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதற்கமைவாக வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் எட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்று சுழியோடி அதிகாரி மற்றும் சுழியோடி பணிப்பிரிவை சேர்ந்த வீரர்களினால் காங்கேசன்துறை துறைமுக வளவில் இந்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பவளப்பாறை கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டு மிகவும் அழகாகக் காணப்படுகின்றது.
கடற்வளத்திற்கான பல்வேறு அத்தியாவசியப் பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கு வடக்கு கடற்படையினர் நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர்.