LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 27, 2019

இந்திய கோயில்களில் வழிபாடு செய்யும் ரணில்

கர்நாடக மாநிலம் கொல்லூரு
மூகாம்பிகை கோயிலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்ரீ விக்ரமசிங்க ஆகியோர் இரண்டு நாட்கள் ஆன்மீகப் பயணமாக இந்தியா சென்றுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் அவருடைய பாரியாருடன் கர்நாடக மாநிலத்தில் பிரசித்திபெற்ற கொல்லூரு மூகாம்பிகை அம்மன் கோயிலில் நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

இதனையொட்டி, பக்தர்களுக்கு கோயிலுக்குள் செல்ல காலை முதல் பிற்பகல் வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

உடுப்பி மாவட்ட ஆட்சியர் ஹெப்சிபாராணி கொரல்பட்டி மற்றும் உடுப்பி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் நிஷா ஜேம்ஸ் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

இவர்கள், இன்று கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்திலுள்ள கோயிலில் தரிசனம் முடித்துக்கொண்டு, மாலை இலங்கைக்குத் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7