LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, July 23, 2019

கல்முனை செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட தேரரை சந்தித்தார் விக்னேஸ்வரன்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை
தரமுயர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரை நேரில் சென்று சந்தித்து முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் அவர் கல்முனையில் அமைந்துள்ள சுபத்திரா ராமய விகாரை வளாகத்தில் தேரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் சிங்கள மகா வித்தியாலய நிலைமை தற்போது மோசமாக இருப்பதாக கூறியதுடன் கிழக்கில் விதவை பெண்களின் வாழ்வாதாரம் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கல்முனை உப பிரதேச செயலக பிரச்சினைகள் உள்ளிட்டவைகளை ஆழமான விளக்கத்துடன் முன்வைத்தார்.

இதனை செவிமடுத்த முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மதிப்பிற்குரிய சங்கரத்ன தேரர் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர் என்ற வகையில் இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆழமாக புரிந்து கொண்டுள்ளதை வரவேற்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும் அப்பகுதி மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சகல வளங்களுடன் அப்பிரதேசங்களை அபிவிருத்தி அடைய முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7