![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivzxjBg8gmPiPEjm23hMDP2T7CvydK1RQ0ohulqL2KVL2vlSjGdnRb_g0iE9hpT1lLbyVhYa6sXDdK3KGwadeTRvPoW2lss6CPAZXb_I4Mxbyf0112ySZww6UBrxAc3Ug1LTAtfR29h5E/s640/%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25B1%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AE%25E0%25AF%258D-%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%25B2%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF-1.jpg)
அந்தவகையில், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழிறங்குவதை அவதானித்த பிரதேச மக்கள் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த பகுதியிலிருந்த குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களின் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் சுரங்கி பெரேரா தெரிவித்தார்.
கொத்மலை ஓயா அமைக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியேற்றபட்டு குறித்த பகுதியில் தாம் குடியேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)