LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, July 31, 2019

நாவலப்பிட்டியில் நிலம் தாழிறங்கியது – மக்கள் வெளியேற்றம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா, தெரிசாகல உனுகல் ஓயா பகுதியில் நிலம் தாழிறக்கம் காரணமாக அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர்.

அந்தவகையில், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழிறங்குவதை அவதானித்த பிரதேச மக்கள் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த பகுதியிலிருந்த குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்களின் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் சுரங்கி பெரேரா தெரிவித்தார்.

கொத்மலை ஓயா அமைக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியேற்றபட்டு குறித்த பகுதியில் தாம் குடியேற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7