
அத்துடன், நாட்டில் இன்னும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய அளவான நிறைவேற்று அதிகாரங்கள் அவரிடமே உள்ளதென குறிப்பிட்ட அவர், 19 ஆவது அரசியலமைப்பினூடாகவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை என கூறினார்.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றும் கொண்டுவரப்படுவதும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
