கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நாம் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழித்தோம்.
10 வருடங்களாக நாட்டில் முழுமையான சமாதானம் நிலைநாட்டப்பட்டிருந்தமையால், நாம் தேசிய பாதுகாப்பு குறித்து பெரியளவில் கவனம் செலுத்தவில்லை.
இதனாலேயே, ஒரு மாதத்துக்கு முன்னர் நாட்டில் பாரிய சவாலான நிலைமையொன்று ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதோடு, பாதுகாப்புத் தரப்பினருக்கு மீண்டும் சவாலான நிலைமமையொன்று ஏற்பட்டது.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் மட்டுமல்லாது, யுத்தத்துக்கு பின்னரான காலத்திலும் அனைவரும் தேசிய பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேசிய பாதுகாப்புக்கே அனைத்து தரப்பினரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
தேசிய கொள்கை ரீதியாக இது உறுதிப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே சமூக ரீதியாக பலமான கட்டமைப்புடன் எம்மால் முன்னோக்கி நகர முடியுமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.