LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 17, 2019

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை குறித்து ஐ.தே.க.வின் அறிவிப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அடுத்தவாரம் தீர்மானிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்தவகையில், அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினராக ரிஷாட் பதியுதீன் இருக்கின்ற நிலையில் அவரிடம் கட்சி விசாரணையும் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக இராணுவத் தளபதி கூறிய விடயங்கள் குறித்து விசாரணை நடத்துவதோடு, அதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7