LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 26, 2019

யுத்தகாலத்தை போன்ற சூழ்நிலை மீண்டும் தோன்றியுள்ளது: மன்னார் மேயர்

யுத்தகாலத்தை போன்ற சூழ்நிலை மீண்டும் நாட்டில் தோன்றியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் காணப்படுகின்றனரென மன்னார் மாநகர மேயர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர சபையின் 14 ஆவது அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) மேயர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த மாநகர சபையில் உரை நிகழ்த்தும்போதே ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று,தேவாலயங்கள் மற்றும் விடுதிகளில் கொடூரத்தனமாக தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

குறித்த தாக்குதலில் 253 பேர் உயிரிழந்துள்ளதோடு, பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு கொடூர தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்புக்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் இதனை ஒரு சாதாரணமான விடயமாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகையால் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்து, தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்களை மக்கள் முன்நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இதேவேளை நாட்டில் அச்சம் நிலவுகின்ற காலம் வந்து விட்டதென்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

மேலும் ஆங்காங்கே சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வீடுகளிலும் திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

அதாவது, யுத்த காலத்தைப்போல் தற்போது காட்சியளிக்கின்றது.இந்த விடையங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

மக்கள் அமைதியுடனும்,மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டுள்ள இக்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை கண்டிக்கத்தக்கது”என ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7