LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 11, 2019

எமது தரப்புக்கு சவால் விடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவே – மனோ

எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டுமென்றால் கோட்டாபய ராஜ
பக்ஷ வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “கோட்டாபய ராஜபக்ஷ குறித்து இன்று அதிகமாக பேசப்படுகின்றது. அவர் ஒரு அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்.

இரண்டு நாடுகளின் பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டு வந்தால் இங்கு போட்டியிட முடியும்.

ஆனால் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக்கொள்வது சாதாரண விடயமல்ல. அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடுவதும் கடினமான விடயமாகும்.

அதேபோல் 19ஆம் திருத்தம் வந்துவிட்டது. இப்போது இரட்டை பிரஜாவுரிமை நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலைமை உள்ளது.

கோட்டாபய ராஜ்பக்ஷ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும். எமக்கும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். அந்த வெற்றியில் தான் ஒரு பெறுமதி இருக்கும்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் எமது வேட்பாளரை நாம் தெரிவுசெய்து விட்டோம். ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் அனைவரும் இந்த வேட்பாளருக்கு ஆதரவையும் தெரிவித்துவிட்டோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் பலமான ஒருவரான அவர் பொது அணியின் சார்பில் களமிறங்கவுள்ளார். நிச்சயமாக வெற்றிபெறும் தூய்மையான வேட்பாளரே அவர். வெகு விரைவில் அவரை அறியப்படுதுவோம்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7