LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 4, 2019

முல்லைத்தீவில் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதி மக்கள் இன்று (புதன்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான வீட்டுத் திட்டங்களை விரைவில் அமைத்துத் தரவேண்டும் எனக் கோரிய இப்போராட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

இதன்போது வயோதிபர்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என பல தரப்பினரும் அங்கு கூடியதோடு, பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மக்கள் கையளித்தனர்.

இவர்கள் தற்போது குடியிருக்கும் காணி ஒரு தனி நபருக்குச் சொந்தமானது எனவும் அதனால் இவர்களுக்கு அதே இடத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த காணிகளை விடுத்து வேறு இடத்தில் காணிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7