LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 19, 2019

ஹெலிகொப்டர் ஊழல் வழக்கு: கிறிஸ்டியன் மைக்கேலுக்கு பிணை வழங்க மறுப்பு

ஹெலிகொப்டர் ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிணை வழங்கக் கோரி, டெல்லி குற்றப்புலனாய்வு நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு, சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது குறித்த பிணை மனுவுக்கு, அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிணை மனுவை நிராகரித்துள்ளது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் கிறிஸ்டியன் மைக்கேலை சந்தேகத்தின் பேரில்  குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து, தொடர் விசாரணையை அவரிடம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7