LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 2, 2019

உடைந்து போயுள்ள எமது தேசத்தை குணமாக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது – சுரேன் ராகவன்

உடைந்து போயுள்ள  எமது தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு ஒன்று அனைவருக்கும் உள்ளதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ்.மருத்துவக் கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “படித்த வசதியுள்ள மக்கள் இந்நாட்டை விட்டு சென்றுவிட்டனர். ஒருசிலர் மட்டுமே நம் தேசத்திற்கு சேவை செய்வதற்காக இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நான் வரும்போது மண்ணின் மைந்தன் இல்லை என்று உங்களில் படித்தவர்கள் சிலர் குறிப்பிட்டுவிட்டனர்.

நான் மண்ணின் மைந்தனாக இருக்கவில்லை என்றாலும் பரவாயில்லை மக்களின் மனதில் இருக்கும் ஒரு மைந்தனாகவே இருக்க விரும்பிகின்றேன். ஆகையினாலே உடைந்து போயுள்ள எங்கள் தேசத்தை, உடைக்க வைத்த எங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு. அந்த பொறுப்பின் பயணத்தில் எத்தனையோ சவால்கள் உண்டு.

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 900 வைத்தியர்கள், 1000 தாதியர்கள் தேவைப்படுகின்றனர். இவை எங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது” அவர் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7