![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuzUzkJa-eV5dduuX3hqYyLspuylyVh34vlwa1G6_yCCnQrM61f3s_sl8mKvhhB197P3p80ly8jCMFOu732rdecrsUI8acHZHmX_TVlvuAd4T1N80nmoyn5_Ydes5qs9YX3R_6Ylda7w0/s320/Mullaitivu-Accident-1.jpg)
இந்த விபத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கிப் பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோத முற்பட்ட வேளை வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிஸார் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகுதியினை சேர்ந்த கன்டர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)