LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, April 2, 2019

சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் – இருவர் கைது!

காஞ்சிபுரத்தில் 16 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோயிலுக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். அப்போது சிறுமி சென்ற கோவில் பூட்டியிருந்ததால் வேறு கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக சாரதி தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சிறுமி குறித்த முச்சக்கரவண்டியில் சென்றுள்ளார். அந்த சிறுமியை ராஜாஜி சந்தைக்கு பின்புறம் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்ற சாரதி மேலும் 2 முச்சக்கரவண்டி சாரதிகளை வரவழைத்துள்ளார்.

பின்னர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் விஷ்ணு காஞ்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து சாரதிகளான ராஜா மற்றும் தேவா ஆகியோரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள மற்றொரு சாரதியை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7