LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 4, 2019

நம் காவலாளியை விவசாயிகள், தொழிலாளர்கள் வீட்டு வாசலில் பார்த்திருக்கிறீர்களா? – ராகுல்

நம் காவலாளியை விவசாயிகள் வீட்டு வாசலிலோ, தொழிலாளர்கள் வீட்டு வாசலிலோ பார்த்திருக்கிறீர்களா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், பண மதிப்பு நீக்கத்தின் போது மக்கள் தங்கள் பணத்துக்காக வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானி நின்றார்களா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

அசாம் மாநிலம் லக்மிபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (புதன்கிழமை) ராகுல் காந்தி பேசியதாவது, “மெஹுல் சோக்சி, நிரவ் மோடி, அனில் அம்பானியா பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கியின் வாசலில் நீண்ட வரிசையில் நின்றனர்? மக்கள்தான் கால்கடுக்க நின்றார்கள். இந்தியாவின் திருடர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு நம் காவலாளியின் உதவியுடன் நாட்டை விட்டுப் பறந்தனர்.

நீங்கள் எப்போதாவது, எங்காவது நம் காவலாளியை விவசாயிகள் வீட்டு வாசலிலோ, தொழிலாளர்கள் வீட்டு வாசலிலோ பார்த்திருக்கிறீர்களா? ஆனால் கவுதம் அதானி வீட்டு வாசலிலும் அனில் அம்பானி வீட்டு வாசலிலும் ஏராளமான காவலாளிகள்.

கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்து அனைவரது கணக்கிலும் ரூ.15 இலட்சம் போடுவேன் என்றார் மோடி.

அஸாம் குடியுரிமை மசோதா நிச்சயமாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேறாது. காங்கிரஸினால்தான் அந்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படவில்லை.

குறைந்தபட்ச வருவாய்க்கான ஆண்டுக்கு ரூ.72,000 ரூபாய் நாட்டின் 20% ஏழைக் குடும்பங்களின் பெண்கள் கணக்கில் வங்கிகளில் சேர்க்கப்படும். நாட்டின் 5 கோடி குடும்பங்களுக்கு இந்த உதவி பொருளாதாரத்தை புத்துணர்வுப்படுத்தும்” என்று அவர் தெரிவித்தார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7