அனுராதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”வெள்ளை வான் விவசாரம், போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களை மையப்படுத்தி கடந்த அரசாங்கத்தை தொடர்ந்து குற்றவாளியாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார்கள்.
ஆனால் தற்போது அவர்கள் ஆட்சியில் ஜனநாயகத்திற்கு அமைவான செயற்பாடுகளா இடம்பெறுகின்றது என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
சாதாரண வியாபாரிகள் அதிகாரம் கொண்டவர்களினாலே கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
இச்செயற்பாடு தற்போது பாரிய மர்மங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது.
1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் எவ்வாறு அச்ச நிலையில் வாழ்ந்தார்களோ அச்சூழ்நிலையே தற்போதும் காணப்படுகின்றது.
ஆனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் நல்லிணக்கம் முன்னேற்றமடைந்தது” என அவர் கூறினார்.
