LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, March 4, 2019

யுத்தத்தின் பின்னரே நாட்டில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் வந்தது – மஹிந்த

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் நல்லிணக்கம் முன்னேற்றமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”வெள்ளை வான் விவசாரம், போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களை மையப்படுத்தி கடந்த அரசாங்கத்தை தொடர்ந்து குற்றவாளியாக விமர்சித்து ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆனால் தற்போது அவர்கள் ஆட்சியில் ஜனநாயகத்திற்கு அமைவான செயற்பாடுகளா இடம்பெறுகின்றது என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

சாதாரண வியாபாரிகள் அதிகாரம் கொண்டவர்களினாலே கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இச்செயற்பாடு தற்போது பாரிய மர்மங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது.

1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் எவ்வாறு அச்ச நிலையில் வாழ்ந்தார்களோ அச்சூழ்நிலையே தற்போதும் காணப்படுகின்றது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் நல்லிணக்கம் முன்னேற்றமடைந்தது” என அவர் கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7