அத்துடன், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்திலேயே எத்தனை படகுகளை விடுவிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், இம்முறை இத்திருவிழாவிற்காக 2,215 யாத்திரிகர்களை அழைத்துவருவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
