நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், மனித கொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவினர் நேற்று (புதன்கிழமை) தகவல் வெளியிட்டுள்ளனர். விசாரணைகளின் பொருட்டு பெயர்களை வெளியிடாத அதிகாரிகள், தாயும் அவரது இரண்டு மகன்களுமே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சந்தேகத்திற்கிடமாக உள்ளதென குறிப்பிடும் குறித்த விசாரணை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், அது தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருவதாக கூறியுள்ளனர். அத்தோடு, இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்தால் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் சிறிது நாட்கள் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்






