LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 30, 2019

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அமைதியுடன் அனுஷ்டிக்க வேண்டும் – சிவாஜி அழைப்பு

வட. மாகாணசபை காலாவதியாகியுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் அமைதியுடன் அனுஷ்டிக்க வேண்டும் என்று வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ், ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களும் இணைந்து புனிதமாகவும் அமைதியாகவும் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் ஜெனீவா கூட்டத்தொடரில் எமக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. எனினும் இறுதியில் நாமே வெற்றியடைவோம். இந்த விடயம் அரசிற்கும் தெரியும் எனினும் அவர்கள் காலத்தை இழுத்தடிப்பு செய்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7