கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.எல். அலாவுத்தீனின் நிர்வாக திட்டமிடலின் சிறப்பம்சமாக அவரது தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்திய அதிகாரிகள், உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு தமது சேவையினை வழங்கினர்.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிராந்திய மார்புநோய் தடுப்பு பிரிவு, மல்வத்தை மற்றும் சென்னெல் கிராமம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இந்நடமாடும் சேவையில் கலந்துகொண்டு தமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் வரவேற்பு (ஈ - றிசப்சன்) பிரிவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுத்தீனால் திறந்துவைக்கப்பட்டதோடு இயன் மருத்துவப் பிரிவுக்கான வைத்திய உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பி.எம்.எம்.ஏ.காதர்
