ரொறன்ரோவில் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான போதை பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொக்கேயின், மரிஜுவானா மற்றும் போதை மாத்திரைகள் என மூன்று வகை பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 9ஆம் திகதி மூன்று வீடுகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போதே குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், அறுபத்து எட்டு கிலோகிராம் கோகோயின், ஐம்பத்து ஐந்து கிலோ மரிஜுவானா மற்றும் சிறிய அளவிலான படிக மெத்தை, கேடமைன் மற்றும் எம்.டி.எம்.ஏ. ஆகியனவை இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.





