LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 18, 2019

தங்கத்தில் கரும்பு, காளை, பொங்கல் பானை : அசத்தும் ஆம்பூர் நகைத் தொழிலாளி

ஆம்பூரைச் சேர்ந்த நகைத் தொழிலாளி ஒருவர், தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, காளை, அடுப்பு, விறகு போன்றவைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் வடிவேல் நகரைச் சேர்ந்தவர் சி.எஸ்.தேவன் (53). பரம்பரை நகைத் தொழிலாளியான இவர், அரசுடமை வங்கி ஒன்றில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.

கின்னஸ் சாதனை புரிவதற்காக இவர், தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரி, திருக்குறள் சுவடி, மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோரின் உருவப்படங்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த மாதம் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, 3 கிராம் 700 மில்லி தங்கத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் உருவாக்கியிருந்தார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி 1 கிராம் 900 மில்லி தங்கத்தில், மிகநுண்ணிய அளவில் மூன்று கரும்புகள், பானை, அடுப்பு, விறகு, காளை மாடு, கரண்டி ஆகியவற்றை தத்ரூபமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து தேவன் கூறியதாவது; “கின்னஸ் சாதனை புரிவதற்காக தங்கத்தில் நுண்ணிய அளவில் பல்வேறு மாதிரி பொருட்களை உருவாக்கி வருகிறேன். ஏற்கெனவே நான் இந்திய வரைபடம் மற்றும் தலைவர்களின் உருவப்படங்கள், தமிழக அரசின் பசுமை வீடு போன்றவைகளை உருவாக்கியுள்ளேன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு, விறகு ஆகியவற்றை உருவாக்கினேன்” என தெரிவித்தார்.





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7