இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை நடத்தும் பொங்கல் விழா
2019.01.17 ஆம் நாள் மாலை 4.00மணி முதல் 7.00 மணி வரைத் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்கள் இவ்விழாவில் தலைமை விருந்தினராகப் பங்குகொள்வார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின்பொதுச்செயலாளர் கி .துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் க .சரவணபவன் ஆகியோர்சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வர்.
நிகழ்வில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவின் தொன்மை, சிறப்பு, முதன்மை, அதன் எதிர்காலம் பற்றியஆய்வுரைநிகழ்த்தப்படும்.
(அ . அச்சுதன்)