பிறையோடு நதி கொண்ட நாதா போற்றி
நுரை கொண்ட கடலோடு அமர்ந்தாய் போற்றி
குறையின்றி அடியார்க்கு அருள்வாய் போற்றி
நினைக்கின்ற காரியங்கள் முடிப்பாய் போற்றி
நிதமேயுன் இரா வண்ண நினைப்பே போற்றி
பக்குவத்தாய் கேசகின் இறையே போற்றி
வண்டார் குழவி போற்றும்
பெருந்தகையே
கோணமா மலையானே போற்றி போற்றி
(கேசகி அம்மையார் இராவணப்பெருமானின் தாயார்
வண்டார் குழவி (மண்டோதரி தேவி) இராவணப்பெருமானின் மனைவி)
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏





