LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, December 9, 2018

கனடாவில் ஹூவாவி CFO கைது: கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – சீனா எச்சரிக்கை!

கனடாவில் கைது செய்யப்பட்ட ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூவை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனச் சீனா எச்சரித்துள்ளது.

ஹூவாவி நிறுவனரின் மகளும் அவர் நிறுவிய ஹுவாவி டெக்னால ஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்க் வான்சூ டிசம்பர் 1 ஆம் திகதி கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தூண்டுதலால் அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன வெளியுறவுத் துணை அமைச்சர் லீ யூசெங் சீனாவுக்கான கனடா தூதர் ஜோன் மெக்கெல்லத்துக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் மெங்க் வான்சூவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை மெங் எந்த குற்றமும் செய்யவில்லை, இந்த கைது நடவடிக்கை அவரது மனித உரிமைகளை மீறும் வகையில் உள்ளது” என சீனாவின் தூதரகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசேட அறிவித்தல் ஒன்றை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7