மத நல்லிணகத்தை சமூக ஒற்றுமையையும் ஏற்படுத்தும்
வகையில் சிறார்களின் ஒன்று கூடல் நத்தார் பண்டிகைவிசேட நிகழ்வு காத்தான்குடி
பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தலைமையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்
நடைபெற்றது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும்
மற்றும் காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் கிராம சிறுவர்களும் இணைந்து இந்த நத்தார் பண்டிகை நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வின் போது சிறார்களுக்கு
இனிப்பு பண்டங்களும் பரிசில்களும் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளப்பட்டன
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி
ஆராச்சி , வி மகேஸ்வரன் , ராஜன் மயில்வாகனம் மெதடிஸ்த திருச்சபையின் போதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சிறுவர்கள் ,சிறுவர்களின்
பெற்றோர்கள் கலந்துகொண்டனர்