LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 3, 2018

மூதூர் பிரதேச செயலாளரின் முக்கிய அறிவிப்பு..!




மூதூர் பிரதேச செயலகத்தில் தங்களது அலுவல்களை நிறைவேற்ற வருகின்ற பொதுமக்களுக்கு மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அவரது அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

மூதூர் பிரதேச செயலகத்தில் தங்களது அலுவல்களை நிறைவேற்ற வருகின்ற பொதுமக்கள் தமது அரச சுற்று நிருபத்திற்கமைவாக பணம் செலுத்தி நிறைவேற்றப்பட வேண்டிய அலுவல்களுக்கு மாத்திரம் பணம் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டுகளைப் உடன் பெற்றுக்கொள்ளுமாறும்  மூதூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

காணி அனுமதிப்பத்திரங்கள், மண் அனுமதிப்பத்திரங்கள், வீடமைப்பு மற்றும் மலசலகூட செயற்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள், சமுர்த்தி முத்திரை  போன்ற பணிகளின் போது அரச சுற்றுநிருபத்திற்கு மாறாக முறைகேடான வகையில் எமது எந்த அரச ஊழியர்களாவது பணம் அறவிட்டால் (இலஞ்சம் கோரினால்) அதனை எழுத்து மூலமாக எனக்கு அறியத்தருமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு இலவசமாக செய்யப்படவேண்டிய சேவைகளுக்கு பணம் அறவிட்டு (இலஞ்சம் பெற்று) அவர்களின் கடமைகளை செய்ய முற்படுவோர் தொடர்பாக மக்கள் எழுத்து மூலமாக கொடுக்கப்படும் முறைப்பாடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு, அவை தொடர்பில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன் என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக  பொதுமக்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

(அ . அச்சுதன்)




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7