கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராமத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.தங்களது வீட்டு காணிக்குள் மற்றும் வயல் நிலங்களினுள் புகுந்து இக் கட்டாக்காளி மாடுகள் பயிர்களை நாசமாக்கி விடுவதாக தெரிவிக்கின்றனர்.
நடுவூற்று வைத்தியசாலை சுற்று வட்டம், சுனாமி வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாடுகளின் தொல்லை காரணமாக தங்களது விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தங்களது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.
இவ்வாறான கட்டாக்காளி மாடுகளை கிண்ணியா பிரதேச சபை கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அ . அச்சுதன்





