
மக்களுக்கு பயத்தினையும், பாரபட்சங்களையும் ஏற்படுத்தும் மலினத்தனமான பரப்புரைகளை பழமைவாதக் கட்சியினர் முன்னெடுத்துவருவதாகவும், அதேவேளை தமது லிபரல் அரசாங்கம் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை நேர்மறையான, அறிவுசார் கண்ணோட்த்துடன் அணுகி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளில் காணப்படும, குடியேற்றவாதிகளுக்கு எதிரான நிலைப்பாடுகளோ, தேசியவாத சித்தாந்தங்களோ அண்மையில் கனடாவில் இடம்பெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தல்களில் முன்னிலை பெறவிலலை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு, சுலபமான, எளிமையான தீர்வுகளை முன்வைத்துவரும் அரசியல் தலைமைத்துவத்தினை கனேடியர்கள் விரும்பு வரவேற்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படையிலேயே கனேடிய மக்கள் மீதான நம்பிக்கையினையே தனது நம்பிக்கையாகவும் கொண்டுள்ளதாகவும், அதனையே எதிர்வரும் தேர்தலிலும் முன்னிறுத்தி வெற்றிகாணவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
