கிளிநொச்சி ஆய்வு, அறிவியல் கழகம் ஏற்பாடு செய்த"சமகால அரசியல் நெருக்கடிகள்" பற்றிய கருத்தரங்கு ஊடகவியலாளர் கருணாகரன் தலைமையில் இனறு 24.11.2018 சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.இதில் சிராஜ் மசூர் "நாடு எங்கே போகிறது? அரசியல் குழப்பமும் அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுகளும்".
இதில் யதீந்திரா " தெற்கின் அதிகார மோதலும் தமிழர் தரப்பின் அணுகுமுறைகளும்" எனும் தலைப்பிலும், வழுதி "ஆதிக்க அரசியல் போட்டியும் எதிர்த் தரப்புகளின் சவாலும்" என்ற தலைப்பிலும் பேசினர்.
பன்முக உரையாடலும் மாறுபட்ட பார்வைகள் உரசுவதும் புதிய சிந்தனைகள் உருப்பெற வழிவகுக்கும். அந்த வகையில் இவ்வாறான உரையாடல் வெளிகள் மிக அவசியமாக அமைந்ததுடன் இந்நிகழ்வில் பல்வேறுபட்ட துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.








