திருகோணமலை -கிண்ணியா வான் எல பிரதேச முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலை கலாசார நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிண்ணியா நரசபை தவிசாளர் ஹில்மி மஃரூப் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
மிகச் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் முன் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் பலரதும் பாராட்டைப் பெற்றன.(ந)
(ஏ.நஸ்புள்ளாஹ்)