LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, July 26, 2020

மலையக மக்களை தாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தமக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், என்றாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை தமக்கு அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஹற்றன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “அமரர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோதுகூட பெருந்தொட்ட மக்கள் தொடர்பாகவே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார். பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்களையும் முன்மொழிந்திருந்தார். தாத்தா (சௌமியமூர்த்தி தொண்டமான்) அதன்பின்னர் பேரன் (ஆறுமுகன் தொண்டமான்) இன்னும் அவரின் மகன் (ஜீவன் தொண்டமான்) ஆகிய மூவருடனும் வேலை செய்வதற்கான அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியுள்ளது. இதன்படி மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மூவரும் கையாளும் அணுகுமுறைகள் தொடர்பாக எனக்குத் தெரியும். பாட்டன், தந்தை ஆகிய இருவர் கையாண்ட அணுகுமுறைகளை விடவும் ஜீவன் தொண்டமான் மிகவும் வித்தியாசமான முறையில் அணுகிவருகின்றார். பெருந்தோட்ட உரிமையாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தின்போது அவர் மிகவும் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்தார். மறுக்கமுடியாத வகையிலேயே கருத்துகளை முன்வைத்தார். பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் நாம் மீண்டும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரமே எமது ஆட்சியின்போது மலையகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக லயன் யுகத்துக்கு முடிவுகட்டுவதற்கு தொண்டமானே அடித்தளமிட்டார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகவே, கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்தினோம். எனவே, பெருந்தோட்ட மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்” என்றார். 9 Shares

மலையக மக்களை தாம் ஒருபோதும் கைவிடமாட்டோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தமக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், என்றாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை தமக்கு அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஹற்றன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “அமரர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோதுகூட பெருந்தொட்ட மக்கள் தொடர்பாகவே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார். பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்களையும் முன்மொழிந்திருந்தார்.
தாத்தா (சௌமியமூர்த்தி தொண்டமான்) அதன்பின்னர் பேரன் (ஆறுமுகன் தொண்டமான்) இன்னும் அவரின் மகன் (ஜீவன் தொண்டமான்) ஆகிய மூவருடனும் வேலை செய்வதற்கான அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியுள்ளது. இதன்படி மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மூவரும் கையாளும் அணுகுமுறைகள் தொடர்பாக எனக்குத் தெரியும்.
பாட்டன், தந்தை ஆகிய இருவர் கையாண்ட அணுகுமுறைகளை விடவும் ஜீவன் தொண்டமான் மிகவும் வித்தியாசமான முறையில் அணுகிவருகின்றார். பெருந்தோட்ட உரிமையாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தின்போது அவர் மிகவும் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்தார். மறுக்கமுடியாத வகையிலேயே கருத்துகளை முன்வைத்தார்.
பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் நாம் மீண்டும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரமே எமது ஆட்சியின்போது மலையகத்தில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக லயன் யுகத்துக்கு முடிவுகட்டுவதற்கு தொண்டமானே அடித்தளமிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகவே, கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்தினோம். எனவே, பெருந்தோட்ட மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்” என்றார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7