![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0E_WsjZQ4dWd66KScxWFW85AordkeNW4WXVshrmlLA33_qP1oABAIbiM_I07-OpaLVlT4JMstaoOBv_YysshuC9W-yiSllHiYB-pKlL4_p6EUNMGlYmnCLBF6ays0Z2uCpu5atrJnnuA/s320/Thattunkal.com.jpg)
நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோவிளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பன குற்றச்சாட்டுக்களை அடுத்து இவர்களுக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியபோது கைது செய்யப்பட்டனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் வகையிலான 10 விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலின் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றுக்கொண்டு, அதனை அவுஸ்திரேலியாவின் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிட்டு நிதி தூய்தாக்கலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)