LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 11, 2019

‘புல்புல்’ புயல் கரையைக் கடந்தது – 2 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
மாநிலங்களின் கரையோரப் பகுதியை ‘புல்புல்’ புயல் கடந்த நிலையில் அதில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷை ஒட்டிய பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் ‘புல்புல்’ புயல் கரையைக் கடந்தது.

மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதியில் நேற்று முழுவதும் மழை பெய்தது. மரங்கள் வேருடன் சாய்ந்தன. கொல்கத்தா நகரில் களியாட்ட விடுதி ஒன்றில் மரம் சாய்ந்ததில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இதேபோல், ஒடிசாவின் கேந்திரபாரா நகரில் சுவர் இடிந்து வீ’ழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 17 குழுவினர் மேற்கு வங்காளத்திலும், 6 குழுவினர் ஒடிசாவிலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என உட்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

இந்த புயல், அந்தமான் அருகே 400 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர், கடந்த 8ஆம் திகதி அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இதனால் தொடர்ந்து மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

இதனால் கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதி சீற்றமுடன் காணப்படும் என்றும் இதனை முன்னிட்டு வரும் 11ஆம் திகதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7