துருக்கி பாதுகாப்பு அமைச்சர் நேற்று (புதன்கிழமை) இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ததானது துருக்கியின் பாதுகாப்பு தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கானதே தவிர யாரையும் அச்சுறுத்தும் முயற்சி அல்ல என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் எச்சிரிக்கையை மீறி ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் பொருளதார தடை சட்டத்தின் கீழ் அங்காரா பொருளாதார தடைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என வொஷிங்டன் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.