இதற்காக பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதோடு இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மணல் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதாக தகவல் கிடைத்திருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திருகோணமலை மற்றும் கிண்ணியா போன்ற பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்த அவர், இது குறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.