LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 11, 2019

இந்திய தேர்தலுக்காக பத்து இலட்சம் கணக்குகளை நீக்கும் ஃபேஸ்புக் நிறுவனம்

இந்திய பொதுத் தேர்தலை முன்னிட்டு பத்து இலட்சம் போலிக் கணக்குகளை நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த போலிக் கணக்குகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் நேர்மையாகவும், இடையூறு இன்றியும் நடைபெறுவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்களாக பணியாற்றி வருகின்றோம் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதற்கான பணிகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், பல்வேறு குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை பொதுப்படையாக்க புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது.  இதன் மூலம் அரசியல் விளம்பரங்களை பயனர்கள் மிக எளிதாக கண்டறிந்து விட முடியுமென தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் இரு புதிய வசதிகளை இணைத்துக்கொண்டது. இவற்றைக் கொண்டு பயனர்கள் தங்களது வேட்பாளர்களைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள முடியும். அதேநேரம் வாக்கு செலுத்தியதும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக வாக்கு செலுத்தியதை பகிர்ந்து கொள்ளலாம்.

கடந்த வாரம் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறியதாக கிட்டத்தட்ட 700 பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கியதாக தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7