இன்று ஹட்டனில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில், நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றை காண பொதுத் தேர்தலை நடத்தக்கோரி கையொப்பம் திரட்டும் போராட்டம் ஒன்று நடைப்பெற்றது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந்த கையொப்பம் திரட்டும் நிகழ்வில் ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச மக்கள், சமூக அமைப்புக்களைச் சார்ந்தோர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொது தேர்தலை நடத்தும்படியும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





